“வாகனம் ஓட்டும் போது செல்போன் பேசாதீர், அழைப்பது எமனாகவும் இருக்கலாம்“. “ஒரு அழைப்பு தவறினால் நீங்கள் இறந்து விடமாட்டீர்கள்“. இது போன்று பல விளம்பர வாசகங்களை தமிழ்நாடு/சென்னை மாநகர போலீஸ் வெளியிட்டிருக்கிறது.
ஆனால் இதையும் விட ஒரு படி தாண்டி பெங்களூரு போலீஸ் போன வருடம் வெளியிட்ட புகைபட விளம்பரம் சற்று பயத்தை கூட்டுவதாகவும், நேரடியாக ஓட்டுநருக்கு கூறாமல், நாம் மிகவும் விரும்பும் மனைவிக்கு, கணவனுக்கு அல்லது காதலனுக்கு அறிவுரை கூறுவது போல் இருக்கிறது.
ஓட்டுபவர்கள் தன்னை தியாகியாகவோ, திறமைசாலியாகவோ நினைத்துக்கொண்டு இது போன்று “மல்டி டாஸ்கிங்” செய்தாலும், மறுமுனைலிருப்பவர்களாவது அழைக்காமல் இருக்கடும். விளம்பரம் எப்படி இருந்தாலும் எங்கும் சுய அறிவு தான் வேலை செய்ய வேண்டும், தானும் சாகாமல், பிறரையும் சாகடிக்காமல் இருக்க. இதோ படங்கள்.
விளம்பரம் பற்றிய தகவல்:
Advertising Agency: Mudra Group, India
Executive Creative Director: Joono Simon
Art Director: Vinci Raj
Copywriter: Akhilesh Bagri
Photographer: Mallikarjun
Retouching : Sathish
Published: 2009
—
Courtesy : adsoftheworld.com
Good Post…
Keep Posting Such things which helps
for the betterment of the society….
Thanks Ram Mohan 🙂