Leave a comment

தி அமேசிங் ஸ்பைடர்-மேன் 3D 2012

poster of the amazing spider-man 3d

The Amazing Spider-Man 3D 2012 Part – 4

  • ஒரு மாணவன், அவனை சிலந்தி கடிக்கும் உடனே அவன் சிலந்தி மனிதன் ஆகிவிடுவான். அப்புறம் ஆங்காங்கே பசை நூலை பீய்ச்சியடிப்பான்.
  • ஒரு மாணவி ஒரே சமயத்தில் ஸ்பைடர்-மேனோடு சேர்த்து 2 பேரை காதலிப்பார். இதில் நம் ஹீரோ ஜெய்பார். கடைசியில் ஊருக்கு உழைக்க நேரும், காதலை கண்ணீரோடு கைவிடுவார். ஆனால் இம்முறை ஹீரோயினி ஸ்பைடர்-மேனை மட்டுமே காதலிப்பது புதுசு.
  • ஒரு நல்ல விஞ்ஞானி, அவனது முயற்சியை கம்பெனி நிர்வாகம் ஒத்துக்கொள்ளாது, வேலையை விட்டு தூக்கும். கடுப்பாகிப் போனவர் பச்சையாய் இருக்கும் ஒரு தண்ணீரை குடித்து பல்லியோ கில்லியோ ஆகிவிடுவார். ஊரை ரெண்டாக்குவார். கிளைமாக்ஸில் திருந்தி விடுவார்.
  • இதற்கு இடையில் ஒரு வெட்டி போலீஸ் ஆபீசர், 100 கார்கள், 50 ஹெலிகாப்டர்கள், சில விபத்துகள், அதே நியுயார்க் நகரம்.

நம்மூரில் சொல்வது போல இது பழைய பஞ்சாங்கம் கூட அல்ல. ஒரே பஞ்சாங்கத்தை ரீபிரிண்ட் பண்ணிக்கொண்டிருக்கிறார்கள்.

கதை சுருக்கம்

ஸ்பைடர்-மேனின் தந்தை ஒரு விஞ்ஞானி. ஊனமில்லாத உலகை உருவாக்க வேண்டும் என்ற ஆராய்ச்சி மேற்கொள்ள, அது தோல்வியில் முடிகிறது. விளைவு விபரீதம் ஆகிவிடக்கூடாது என்பதற்காக தன் ஆரய்ச்சி படிவங்கள் சிலவற்றை அழித்து விடுகிறார். மேற்படி ஆரய்ச்சிகளை தனிமையில் செய்ய எண்ணி தன் மகனை மாமாவின் பாதுகாப்பில் விட்டு விட்டு தலைமறைவாகிறார். Chapter Over.

தனது மாமா வீட்டில் தான் ஸ்பைடர்-மேன் வளர்கிறான். திடீரென ஒரு நாள் குடோனில் இருக்கும் தன் தந்தையின் Briefcase கிடைக்க அதில் அந்த பழைய ஆரய்ச்சியின் சில ரகசியங்கள் கிடைக்கிறது. அதைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள College Internship Program என்ற சாக்கில் OSCORP ஆரய்ச்சி கூடத்திற்கு சென்று எதோ தவறு செய்ய அங்கே ஒரு சிலந்தி கடித்து சிலந்தி மனிதனாகிறான்.

இச்சம்பவங்களுக்கிடையில் தான் ஏற்கனவே ஒரு போட்டோவில் பார்த்த தன் தந்தையின் நண்பரை (ஒரு கையில்லாதவர்) OSCORP-ல் சந்தித்து – பேசி – பழகி அவரது ஆரய்ச்சிக்கு பெரும் குழப்பமாக இருந்த ஒரு Equation-னை Solve செய்து தருகிறான். அதன்படி ஒரு பல்லியின் DNA-வை ஒரு கால் ஊனமான எலியிடம் செலுத்தி கால் முளைக்க வைத்து வெற்றி காண்கிறார்கள்.

இச்சோதனையை மனிதர்களிடம் செய்து பார்க்கலாம் என மேலிடம் சொல்ல, ஆராய்ச்சி முழுமையடையவில்லை அவ்விஞ்ஞானி மறுக்க, உடன் அவரை வேலையை விட்டு தூக்குகிறார்கள். வெறுப்படைந்த விஞ்ஞானி தனக்குத்தானே சோதித்துக்கொள்ள, ராட்ஷதப்பல்லியாகிறார்.

பிறகென்ன அந்த பல்லி ஊரை ரணகளம் பண்ண நம்ம ஸ்பைடர் ஹீரோ தடுத்து அதகளம் பண்ணுவது தான் மீதி. காதல் பிரிவோடு முடிவு சுபம்.

பல்லியும் சிலந்தியும் அமேரிக்கவை அச்சுருத்துவதால் இவ்விரண்டையும் வடை வைத்து பிடிக்க ஒரு போலீஸ் வேணுமே. அது தான் ஹீரோயினி அப்பா. முடிவில் தன் மகளின் பாதுகாப்பிற்காக அவளை பிரிந்து விடுமாறு சத்தியம் வாங்கிக் கொண்டு இறந்து விடுகிறார். படம் Over.

hero - heroine - villain - police

நான்கு நல்லவர்கள் – ஹீரோ – ஹீரோயினி – வில்லன் – போலீஸ்

இந்தக் குழுவினர் 2 வருத்திற்கு ஒரு முறை 100 கோடியை தண்டம் செய்வது என முடிவெடுத்துவிட்டார்கள். ஒரே கதையை 4 முறை படம் எடுத்த இவர்களை விட, அந்த நான்கையும் பார்த்த என்னை …. !@#$ … என்ன செய்வது சரத்பாபுவால் துரோகம் செய்யப்பட்டு ஒரே பாட்டில் ரஜினி பணக்காரராவதையும், தென் தமிழகத்தில் இருந்து சென்னை வந்து எதிரிகளை வதம் செய்யும் விஜயையும் பார்த்து பார்த்து பழகியவன் என்பதால் இந்த படத்தையும் புதிதாகவே பார்த்தேன்.

காட்சிகளில் கூட மாற்றம்மில்லாமல் இருப்பது தான் செம கடுப்பாகிறது. முதலில் வம்பிழுக்கும் சக மாணவன், அவனை திருப்பியடிப்பதால் வரும் காதல், சிலந்தி மனிதனானவுடன் தனியாக ப்ராக்ட்டீஸ் பண்ணுவது, அறிவுரை கூறிய மறுநாள் அதே மாமா கொலையாவது, அதற்கு பழிவாங்க கிளம்பி M.G.R போல் ஊரை காப்பற்றுவது, அவ்வப்போது தன்னம்பிக்கை டயலாக் அடிப்பது, காதலை கழட்டிவிட்டு அழுவது. நியுயார்கில் ஒரே தெருவில் டைவ் அடித்து பறப்பது, ஆய்வகத்தில் ப்ளு (நல்லது) & பச்சை (கெட்டது) அமிலங்கள் ரெடி பண்ணுவது. கலர கூடவாய்யா மாத்த மாட்ட நீ.

நம்மூரில் காலேஜ் என்றால் கேன்டீனும், இன்டர் காலேஜ் காம்படீஷனும். ஹாலிவுட்டில் ஸ்கூல் என்றால் ஒரு வெரண்டாவில் பீரோவை திறந்து திறந்து மூடுவது.

தியேட்டரில் ஒரு கொடுமை என்னவென்றால், 3D படம் என்பதால் ஒரு கீறல் விழுந்த கண்ணாடிக்கு 30 ரூபாய் வாடகை வேறு, மேலும் ஏதேனும் சேதாரம் என்றால் 150 ரூபாய் அபராதமாம்.

இப்படத்தில் அமேசிங் என்றால் அது 3D தான். படம் முழுவது 3D-ல் பார்ப்பது சூப்பராக இருக்கிறது. நியுயார்க் நகரின் கூர்மையான கட்டிடங்கள் கண்ணை கிழிப்பது, அடுகடுக்காகத் தெரிவது, நம் கண்ணில் நூலை பாய்ச்சுவது, தூசு துகள்கள் பறப்பது … என.

சாதரணமாகப் பார்த்தால் இந்தப் படம் ஒரே கதையுள்ள 4வது படம். 3D-ல் பார்த்தால் ஒரே கதையுள்ள 4வது முதல் படம். குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். அதனால் பெற்றோரும் போய் பாருங்கள் 2:15 நிமி. பொழுது போகும்.

Leave a comment

மகளிர் மேளா 2012 : குடியரசு தின சிறப்பு

Women’s Mela 2012, Chennai by self help groups

நேற்று தொழில் மற்றும் சுற்றுலா துறை பொருள்காட்சிக்கு சென்று சோர்ந்து போய் அமர்ந்திருந்தோம். (அத பத்தி அப்பறம் எழுதுறேன்) 6:10 மணிக்குள் பார்த்து முடிந்து விட்டதால், அடுத்து எங்கே போகலாம் என யோசித்த போது… ‘டபக்கென்று’ வள்ளுவர் கோட்டம் அருகில், அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் மகளிர் மேளா நடப்பது ஞாபகத்திற்கு வர அங்கே சென்றோம். உருப்புடியாக 1 மணி நேரம் கழிந்தது.

மகளிர் மேளா 2012, சென்னை

மகளிர் மேளா 2012, சென்னை


அனேகமாய் 37-40 மாவட்ட கடைகள் இருக்கலாம். வாடிக்கையாளர் சேவையும் உண்டு. மிதியடியிலிருந்து பட்டு புடவை, நார் கூடை, இயற்கை உணவு, கல் சட்டிகள், பருத்தி உடைகள், வடகங்கள், நொருக்கு தீனிகள், சாமி சிலைகள் என நிறைய கைவினை பொருட்கள் கிடைக்கிறது. முக்கியம் கணவன்மார்களை (மனைவி) டார்சர் பண்ண பல ஃபேன்சி கடைகளும் உண்டு. இவையனைத்தும் மகளிர் சுய உதவிக் குழுக்களின் தரமான உற்பத்திப் பொருட்கள். சென்ற முறை போன போது கற்றாழை ஷாம்பு, சந்தன சோப்பு, கேழ்வரகு வடகம் என வாங்கினோம். இம்முறை கொல்லிமலையில் இயற்கையில் விளைந்த தினை மாவு, சாமை (மாவு), முறுக்கு, அரிசி வடகம் என வாங்கினோம்.

நுழைவு வாயிலிருந்து …

main exhibition hall

இங்கிருந்து ஆரம்பிக்கவும்

கைவினைஞர் …

entrance

நுழைவு வாயில்

பட்டு புடவை பார்வைக்கு

silk sarees

பட்டு புடவைகள்

வேலூர் மாவட்ட விற்பனையாளர்

vellore district

வேலூர் மாவட்டம் - கூடை பின்னல்

கருர் மாவட்ட கைவினை பொருள்கள்

karur district - fashion handicrafts

கருர் மாவட்டம் - கைவினைப் பொருள்கள்

இயற்கை உணவுகள் – organic foods

kolli hills organic food.

கொல்லிமலை (உரம் சேரா) இயற்கை உணவு

நாமக்கல்

organic food seller - namakkal district

நாமக்கல் மாவட்டம்

புது வாழ்வு திட்டத்தின் கீழ்

new life scheme

புது வாழ்வு திட்டம்

உணவகம்

food court

உணவருந்தும் பகுதி


food court

உணவகம்

பாசி விற்கும் ஜிலேபி (இவங்க பேராம்)

jilebi - a old lady

பாசிமணிகள் விற்கும் ஜிலேபி அம்மா

பெரம்பலூர் சாமிகள்

perambalur district - gods idols

பெரம்பலூர் மாவட்டம் - சாமி சிலைகள்

மலர், கூடை மற்றும் சிலை வியாபரம்

artificial flowers, idols and basket

மலர், சிலை மற்றும் கூடை வியாபரம்

சொல்லணுமா?

kuzhi paniyaaram

பிச்சு போட்ட குழி பணியாரம்

அட்டவனை – இது ரொம்ப முக்கியம்

list of participating districts

மகளிர் மேளா 2012 - ல் கலந்து கொள்ளும் மாவட்டங்கள் (சொடுக்கி பெரிதாக்கவும்)

வாங்குவதற்கு நிறையவே உள்ளது. காசும் அவ்வளவாக கையை கடிக்காது. 500 ரூபாய்க்கு மேல் பொருள்கள் வாங்கினால், வாங்கியவர்களில் குலுக்கல் முறையில் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவருக்கு அதே 500 ரூபாய்க்கு பொருட்கள் இலவசமாக தருகிறார்கள். கண்டிப்பாக சென்று பாருங்கள். தமிழகத்தின் பொருளாதாரம் இது போன்ற முறையில் வளர வாய்ப்பிருக்கிறது.

Leave a comment

Happy New Year! 2012

New Year Greetings for 2012

Greetings! Happy New Year . 2012

Leave a comment

Happy New Year 2011

I wish all of you a happy and prosperous new year 2011

4 Comments

புதிய வகை கண் நோய் பரவும் அபாயம்

“மெட்ராஸ் ஐ” என அழைக்கப்படும் சென்னை கண்நோய் குறிப்பிட்ட சீசனில் வந்து மறைந்துபோகும். சமீப காலமாக மெட்ராஸ் ஐ குறைந்து போனாலும் தற்போது புதிய வகை கண் நோய் பரவுகிறது.

new kind of eye disease

புதிய வகை கண் நோய்

மெட்ராஸ் ஐயை விட அதிக நாட்களுக்கு நீடிக்கும் இந்த புதிய நோயினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கண்களின் வெளிப்படலத்திலும், இமைகளின் உள்புறத்திலும் ஏற்படும் வீக்கத்தினால் கண் வெளிப்படல சுழற்சி நோய் ஏற்படுகிறது.

பாக்டீரியா, புரோட்டோ சோவா போன்ற நுண்ணுயிரிகள் தாக்குதலே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. இந்த புதிய வகை சென்னை கண் நோய் இன்னும் தெளிவாக அடையாளம் காணப்படவில்லை. சாதாரணமாக கண் நோய் தொற்றுக்கு ஆளானவர்களுக்கு 3, 4 நாட்களுக்கு கண்கள் இளஞ் சிவப்பாக இருக்கும். ஆனால் இந்த புதிய வகை கண் நோய் தொற்று குறைந்தது. 10 நாட்கள் வரையில் இருக்கிறது என்று சென்னை அண்ணாநகர் உமா கண் மருத்துவமனை கண் மருத்துவர் அருள்மொழி கூறினார். மேலும் அவர் கூறுகையில், சிலருக்கு 2 வாரங்களுக்கு மேல் இந்த கண் நோய் நீடிக்கிறது. வைரஸ் தொற்று ஆரம்பித்து பின்னர் அதிக நாட்கள் நீடிக்கிறது. இந்த முறை வைரஸ் அதிக தீவிரத்துடன் செயல்படுகின்றன என்றார்.

சென்னை கண் நோய்க்கு பயன்படுத்தும் அதே மருந்தையே இதற்கும் மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். இந்த கண் நோயினால் பாதிக்கப்பட்டு தினமும் நிறைய பேர் வருவதாக டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.

இப்போது காணப்படும் புதிய வகை கண்நோய் குறித்து ஆய்வு செய்து வருவதாக சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனை சீனியர் டாக்டர் வி.ஆர். சுதிர் தெரிவித்தார். தொடர்ந்து பெய்து வரும் மழையாலும் தேங்கி நிற்கும் நீரும் கண் நோயை ஏற்படுத்தும் நுண்ணுயிரிகள் வளரக் காரணமாக உள்ளன என்று டாக்டர்கள் கூறினார்கள்.

நன்றி : மாலை மலர்
படம் : methodsofhealing.com

Design a site like this with WordPress.com
Get started